நடிகர் விஜய் வழக்கு – வேறு அமர்வுக்கு மாற்றம்

செய்திகள்

நடிகர் விஜய் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை வேறு நீதிபதிகள் வேறு நீதி மன்ற அமர்வுக்கு மாற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு நுழைவு வரியிலிருந்து விலக்கு கோரிய நடிகர் விஜியின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் பல்வேறு கருத்துக்களை கூறி இருந்தார் குறிப்பாக நடிகர்கள் ரீல் ஹீரோவாக இல்லாமல் ரியல் ஹீரோவாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.இதன் இடையே நடிகர் விஜய் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அதில் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து தீர்ப்பில் தன்னை குறிப்பிட்டுள்ள விமர்சனங்களை நீக்கவும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சுந்தரேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது அப்பொழுது இந்த வழக்கை வரி தொடர்பாக மேல்முறையீட்டை விசாரிக்கும் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் அமர்வுக்கு மற்ற நீதி மன்ற பதிவு துறைக்கு உத்தரவிட்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *