பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி மீதான வழக்கில் விழுப்புரம் நீதிமன்றம் தினந்தோறும் வழக்கை விசாரித்து டிசம்பர் 20 ம் தேதிக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி எதிராக உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து எடுத்த வழக்கு

தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி கண்ணன், ஐபிஎஸ் அதிகாரிகள் ஜெயராமன், குணசேகரன், வருண் குமார்,டாக்டர் ஆனி விஜயா ஆகியோருக்கு எதிராக துறைரீதியான நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். .
காவல் துறை தரப்பில் ஆஜரான தமிழ்நாடு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, 122 சாட்சிகள் விசாரணை செய்யப்படுவதாகும்,75 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் செங்கல்பட்டு முன்னாள் எஸ்பிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.