சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் நேரடியாக அமேசான் ஒடிடி தளத்தில் வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படம் மாபெரும் வரவேற்பு பெற்றதோடு, அமேசான் ஒடிடி தளத்தில் அதிகமாக பார்க்கப்பட்ட பிராந்திய மொழி திரைப்படமாகவும் சாதனை படைத்தது. மேலும், ஐ.எம்.டி.பி தரவரிசையில் உலக அளவில் 9.1 மதிப்பெண்களுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தது.
சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்த இப்படம் தற்போது இந்தியில் ரீகேம் செய்யப்பட இருக்கும் நிலையில், இப்படத்தின் இணை தயாரிப்பு நிறுவனமான சிக்யா எண்டர்டெய்ன்மென்ட் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2டி நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த நிலையில், சிக்யா நிறுவனத்தின் வழக்குக்கு 2டி நிறுவனத்தின் சார்பில், அந்நிறுவனத்தின் இணை தயாரிப்பாளரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள விளக்கத்தில், ”கேப்டன் கோபிநாத் அவர்களிடம் இருந்து படத்துக்கான உரிமையை பெற்று தந்ததற்கு உண்டான பணத்தை சிக்யா எண்டர்டெய்ன்மென்டிற்க்கு பேசியபடி வழங்கிவிட்டோம். கோபிநாத் அவர்களுக்கு தந்த பணத்தை தவிர, சிக்யா எண்டர்டெய்ன்மென்டிற்க்கு ரூ.3 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஆகை.,” என்று ராஜசேகர் கூறியுள்ளார்.
எந்த ஒரு அடிப்படையும் இன்றி பட வேலைகளை தாமதப்படுத்தவும், அதிகமாக பணம் பெறும் நோக்கத்துடனும் இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர். எங்கள் தரப்பின் நியாயங்களை நிரூபிக்க தேவையான அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.