பிக் பாஸ் மூலம் பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த், கடந்த வாரம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் காரை ஒட்டிச்சென்று ஏற்படுத்திய விபத்தில் படுகாயம் அடைந்தார். அவருடன் பயணித்த அவருடைய தோழி ஒருவர் உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த யாஷிகா ஆனந்துக்கு இடுப்பு மற்றும் கால் எலும்பில் முறிவு ஏற்பட்டதாகவும், அவர் நடக்க பல மாதங்கள் ஆகும் என்றும் தகவல் வெளியானது.
இந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த யாஷிகா ஆனந்த், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விட்டார். ஆனால், அவர் தனது வீட்டுக்கு செல்லாமல் தனது தோழி ஒருவரது வீட்டுக்கு சென்றதோடு, அங்கிருந்து தனது உடல் நிலையை கவனித்துக் கொள்ளப் போகிறாராம். அவருக்கு துணையாக செவிலியர் ஒருவர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளாராம்.
மேலும், யாஷிகா ஆனந்துக்கு மூன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாகவும், அவரால் சுமார் 5 மாதங்கள் வரை எழுந்து நிற்கவோ மற்றும் நடக்கவும் முடியாது, என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்களாம்.