மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு உயிரிழந்தார். அவருக்கு வயது 77.
கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், நேற்று அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று இரவு அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளனர்.