ஆப்கானிஸ்தான் ஆட்சியை கைப்பற்றிய தலிபான்கள்!

செய்திகள்

ஆப்கானிஸ்தானில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள உள்நாட்டு போரில், தலிபான்கள் கை ஓங்கி வரும் நிலையில், ஆப்கானிஸ்தான் ஆட்சியை அவர்கள் கைப்பற்றி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் முக்கிய மாகாண தலைநகரங்களையும் அந்நாட்டின் 2-வது பெரிய நகரான கந்தகாரையும் கைப்பற்றினர். அடுத்து தலைநகர் காபூலை குறிவைத்த தலிபான்கள் முன்னேறினர். முதலில் காபூலை சுற்றியுள்ள மாகாண பகுதி மற்றும் நகரங்களை தங்கள் வசம் கொண்டு வந்தனர். தலிபான்கள் முன்னேறி வருவதை ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினரால் தடுக்க முடியவில்லை.

இன்று காபூல் நகருக்குள் நுழைந்த தலிபான்கள், நாங்கள் சண்டையிட விரும்பவில்லை, சமாதான முறையில் அதிகாரத்தை கைப்பற்ற விரும்புவதாக அறிவித்தனர்.

இந்நிலையில், காபூல் நகரை தங்கள் வசமாக்கிய தலிபான்கள் நாட்டின் அதிகாரத்தையும் கைப்பற்றியுள்ளனர். தலிபான்கள்அதிகாரத்தை கைப்பற்றியதை அடுத்து இடைக்கால தலைவராக அலி அகமது ஜலாலி நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *