தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக டைம் லூப் அடிப்படையிலான திரைப்படமாக ஜாங்கோ தயாராகி வருகிறது

எத்தனையோ வித்தியாசமான படைப்புகளை கண்டுள்ள தமிழ் திரைப்பட உலகில் புதியதோர் முயற்சியாக டைம் லூப் எனப்படும் நேர வளையம் அடிப்படையிலான திரைப்படமாக ஜாங்கோ தயாராகி வருகிறது இந்த படத்தை மனோ கார்த்திகேயன் எழுதி இயக்கியுள்ளார். சி வி குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட், ஜென் ஸ்டுடியோவுடன் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. தேனியைச் சேர்ந்த மனோ கார்த்திகேயன், இயக்குநர் இமயம் பாரதிராஜாவால் தான் சினிமாவுக்கு ஈர்க்கப்பட்டதாக கூறுகிறார். அறிவழகன் இயக்கிய ஈரம் மற்றும் வல்லினம் ஆகிய படங்களில் உதவி […]

Continue Reading

சினிமாவுக்கு முழுக்குப் போடும் திரிஷா?

தமிழ் சினிமாவில் சுமார் 15 வருடங்களுக்கு மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘சதுரங்க வேட்டை – 2,’ ‘ராங்கி,’ ‘கர்ஜனை’ ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. மேலும், மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில், திரிஷா புதிய திரைப்பட வாய்ப்புகளை நிராகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர் விரைவில் திருமணம் செய்துக் கொள்ள இருப்பதாகவும், திருமணத்திற்குப் பிறகு நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்துள்ள […]

Continue Reading

வீரப்பன் குடும்பத்தார் வேண்டுகோளை ஏற்ற யோகி பாபு படக்குழு!

யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் படம் ‘வீரப்பனின் கஜானா’. காடும் அதை சார்ந்தவைகளையும் மையமாக வைத்து உருவாகும் இப்படம் பெரியவர்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள் என அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, படத்தின் தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த கொலை குற்றவாளி வீரப்பனின் குடும்பத்தார், தலைப்பில் வீரப்பன் பெயரை பயன்படுத்த வேண்டாம், என்று கேட்டுக் கொண்டார்களாம். இதையடுத்து, ‘வீரப்பனின் கஜானா’ என்ற தலைப்பை மாற்ற முடிவு செய்துள்ள படக்குழு விரைவில் புதிய தலைப்பை […]

Continue Reading

’காஞ்சனா 3’ பட நடிகை தற்கொலை

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த ‘காஞ்சனா 3’ படத்தில் லாரன்ஸின் காதலியாக நடித்த ரஷ்ய நாட்டை சேர்ந்த நடிகையும், மாடலுமான அலெக்ஸாண்ட்ரா தூக்கி தற்கொலை செய்துக்கொண்டார். 24 வயதாகும் நடிகை அலெக்ஸாண்ட்ரா தனது காதலருடன் கோவாவில் வசித்து வந்த நிலையில், கடந்த வியாழனன்று அவரது வீட்டில் தூக்கில் தொங்கியபடி பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். காதலரை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வந்ததால், கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்த நடிகை அலெக்ஸாண்ட்ரா, அதன் காரணமாகவே தற்கொலை செய்துக்கொண்டார் என்று […]

Continue Reading

இயக்குநர் விக்டர் இமானுவேலின் ‘மரபு’ ஃபர்ஸ்ட் லுக்ரிலீஸ்!

அறிமுக இயக்குநர் விக்டர் இம்மானுவேல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள படம் ‘மரபு’. இது மரபுசார் பண்புகளை மறந்து அற்பமான விஷயங்களுக்காக வாழும் மனிதனை மையப்படுத்திய படம். எல்லா மனிதர்களுக்கும் இயல்பாகவே இருக்கும் மரபை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் அனுபவமுள்ள பிரபல தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்றியுள்ளார்.இந்தப் படத்தை விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ள படக்குழு அதற்கான வேலைகளில் முழு வீச்சில் இறங்கியுள்ளன. இந்தப்படத்தை தியேட்டர், ஓ.டி.டி. என்று பல தளங்களில் வெளியிட […]

Continue Reading

விக்ரமின் 60 வது படத்தின் தலைப்பு அறிவிப்பு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படத்திற்கு தற்காலிக தலைப்பாக ‘சியான் 60’ என்று வைக்கப்பட்டது. செவன் ஸ்கிரீன் மூவிஸ் நிறுவனம் சார்பி லலித் குமார் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில், இன்று படத்தின் தலைப்பு மற்றும் பஸ்ட் லுக் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்தது. அதன்படி, இன்று மாலை 6 மணிக்கு விக்ரமின் 60 வது படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. படத்திற்கு ‘மகான்’ என்று தலைப்பு […]

Continue Reading

’பிசாசு 2’-வில் இணைந்த அஜ்மல்!

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பிசாசு 2’ படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதி சிறப்பு வேடம் ஒன்றி நடித்திருப்பதாக கூறப்படும் இப்படத்தில் ஆண்ட்ரியா ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், அஜ்மல் ‘பிசாசு 2’ படத்தில் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘அஞ்சாதே’ படத்தில் நடித்திருக்கும் அஜ்மல், தற்போது இரண்டாவது முறையாக அவருடைய இயக்கத்தில் நடிக்கிறார்.

Continue Reading

அவதூறு வழக்கில் இருந்து இயக்குநர் பாலா விடுவிப்பு!

இயக்குநர் பாலா இயக்கத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான படம் ‘அவன் இவன்’. ஆர்யா, விஷால், ஜனனி, மது ஷாலினி ஆகியோர் நடித்திருந்த இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்தது. இதற்கிடையே, இப்படத்தில் நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டி ஜமீன் குறித்தும், பாபநாசம் கரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் குறித்தும் அவதூறாக சித்தரித்ததற்காக இயக்குநர் பாலா, நடிகர் ஆர்யா ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டு இருந்தது. நீண்ட வருடங்களாக விசாரணை நடந்து வந்த இந்த […]

Continue Reading

பாலியல் வன்கொடுமை பற்றி பேசும் ‘மெய்ப்பட செய்’

எஸ்.ஆர்.பிலிம் பேக்டரி என்ற பட நிறுவனம் சார்பில் தமிழ் ராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து தயாரித்திருக்கும் படம் ’மெய்ப்பட செய்’. ஆதவ் பாலாஜி கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக மதுனிகா அறிமுகமாகிறார். மற்றும் ராஜ்கபூர், ஆடுகளம் ஜெயபால், ஓ. ஏ.கே.சுந்தர், பெஞ்சமின்,ஞான பிரகாசம் E G P, சூப்பர் குட் சுப்ரமணி, விஜய கணேஷ், தவசி, அட்டு முத்து,சிவா , ராஜ மூர்த்தி, எமில் கணபதி, அனிஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் தயாரிப்பாளர் தமிழ் ராஜ் நடித்துள்ளார். நாட்டில் […]

Continue Reading

விஷாலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

விஷால் தயாரித்து நடித்த படம் ‘சக்ரா’. கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி வெளியான இப்படத்திற்கு எதிராக அப்போது லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்திருந்தன. முன்னதாக விஷால் நடித்த ‘ஆக்‌ஷன்’ படத்தினால் ஏற்பட்ட நஷ்ட்டம் தொடர்பாக டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனமும், படம் நடிப்பதாக கூறி அட்வான்ஸ் வாங்கிவிட்டு எதுவும் பேசாமல் இருப்பதாக லைகா நிறுவனமும் விஷால் மற்றும் அவருடைய சக்ரா படத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், படத்தின் […]

Continue Reading

விஜேவும் நடிகருமான ஆனந்த கண்ணன் காலமானார்!

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரும், நடிகருமான ஆனந்த கண்ணன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 90-களின் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர்களில் ஒருவரான ஆனந்த கண்ணன், சிங்கப்பூர் வாழ் தமிழர் ஆவார். சிங்கப்பூரில் உள்ள பிரபல தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த ஆனந்த கண்ணன், சென்னை வந்து சம் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார். மேலும், தொலைக்காட்சி தொடர்களிலும், திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கியவர், சில திரைப்படங்களில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். பிறகு சினிமா வாய்ப்புகள் குறைந்ததால் மீண்டும் சிங்கப்பூர் […]

Continue Reading

அதிமுக-வால் இயக்குநர் பா.இரஞ்சித்துக்கு ஆபத்தா?

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் சமீபத்தில் நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றதோடு விமர்சன ரீதியாகவும் பாராட்டப்பட்டது. 1970 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் சென்னையில் நடந்த குத்துச்சண்டை போட்டிகளை மையப்படுத்திய இப்படத்தில் படமாக்கப்பட்ட குத்துச்சண்டை காட்சிகள் மற்றும் குத்துச்சண்டை வீரர்களாக நடித்த நடிகர்களுக்கும் பெரும் பாராட்டு கிடைத்தது. இதற்கிடையே, ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் திமுக- குறித்து உயர்வாக பேசுவது போன்றும், அதிமுக குறித்தும் அதன் நிறுவனர் எம்.ஜி.ஆர் பற்றியும் […]

Continue Reading

அருண் விஜய் படத்தில் நடித்த கங்கை அமரன்!

இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது. இப்படத்தில் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்க, ராதிகா, யோகி பாபு, ராஜேஷ், போஸ் வெங்கட், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அருண் விஜயின் 33 வது திரைப்படமான இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. பகலில் கதை காட்சிகளும், இரவில் சண்டைக்காட்சிகளும் என இரவு பகலாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இப்படத்தின் மிக முக்கியமான திருப்புமுனை […]

Continue Reading

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராக வாகை சந்திரசேகர் நியமனம்

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராக திரைப்பட நடிகர் வாகை சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினரான நடிகர் வாகை சந்திரசேகர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராகவும், தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தின் தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான ஆணையை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் வாகை சந்திரசேகருக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Continue Reading

’சார்பட்டா பரம்பரை’ படத்தை கைப்பற்றிய கலைஞர் தொலைக்காட்சி

புதிய திரைப்படங்கள் ஒளிபரப்புவதை நிறுத்தி வைத்திருந்த கலைஞர் தொலைக்காட்சி தற்போது மீண்டும் புதிய திரைப்படங்களை வாங்க தொடங்கியிருக்கிறதாம். இதற்கான பேச்சுவார்த்தையும் கோலிவுட்டில் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், பா.இரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் சமீபத்தில் ஒடிடி-யில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற ‘சார்பட்ட பரம்பரை’ படத்தை கலைஞர் தொலைக்காட்சி வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் தொலைக்காட்சி உரிமத்திற்கு ரூ.5 கோடி விலை நிர்ணயம் செய்த படக்குழு, படத்திற்கு கிடைத்த வரவேற்பால் ரூ..8 கோடியாக உயர்த்தி விட, படத்தை வாங்குவதாக […]

Continue Reading

நட்டி படத்தில் இணைந்த ஷில்பா மஞ்சுநாத்!

அறிமுக இயக்குநர் ஹாரூன் இயக்கத்தில் நட்டி நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் நான்கு நாயகிகள் நடிக்கிறார்கள். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. சைக்கோ த்ரில்லர் ஜானர் படமான இப்படத்தில் நான்கு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். அதன்படி, ‘பிளாக் ஷீப்’ நந்தினி, பாரதா நாயுடு மற்றும் ப்ரீத்தி ஆகியோர் எற்கனவே இப்படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், தற்போது ஷில்பா மஞ்சுநாத் இப்படத்தில் இணைந்துள்ளார். ‘காளி’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ ஆகிய படங்களில் நாயகியாக […]

Continue Reading

படப்பிடிப்புக்கு அனுமதி மறுப்பு! – போராட்டம் நடத்த கமல்ஹாசன் ஆலோசனை

கமல்ஹாசன் நடித்து தயாரிக்கும் படம் ‘விக்ரம்’. இப்படத்தில் விஜய் சேதுபதி, மலையாள நடிகர் பகத் பாசில் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். ‘மாஸ்டர்’ புகழ் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி காரைக்குடியில் தொடங்க உள்ளது. இதில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும், செப்டம்பர் 3 ஆம் தேதி வரை அங்கு படப்பிடிப்பு நடத்தவும் […]

Continue Reading

’மாஸ்டர்’ பட தயாரிப்பாளரின் புதிய படத்தில் விஜய் சேதுபதி!

‘மாஸ்டர்’ படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ, தற்போது ‘அழகிய கண்ணே’ என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறார். அறிமுக நடிகர் லியோ சிவக்குமார் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் இயக்குநர் பிரபு சாலமன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இயக்குநர் சீனு ராமசாமியின் சகோதரரும், அவருடன் பல படங்களில் துணை இயக்குநராக பணியாற்றியவருமான ஆர்.விஜயகுமார் இயக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கெளரவ வேடம் ஒன்றில் நடித்துள்ளார். சமீபத்தில் படமாக்கப்பட்ட அந்த காட்சிகளுடன் இப்படத்தின் […]

Continue Reading

தென்னிந்திய நடிகைகளில் நம்பர் ஒன்! – ராஷ்மிகாவுக்கு கிடைத்த பெருமை

‘கிரிக்பார்ட்டி’ என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நாயகியாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, அதன் பிறகு தெலுங்குப் படத்தின் மூலம் ரசிகர்களின் பேவரைட் நடிகரானவர், குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க தொடங்கினார். தற்போது பாலிவுட் சினிமாவிலும் பிஸியாகி இருப்பவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என பல மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் அதிகம் பின் தொடர்பவர்களை கொண்ட தென்னிந்திய நடிகை என்ற பெருமை ராஷ்மிகா மந்தனாவுக்கு […]

Continue Reading

திருமணத்தை அறிவிக்கும் நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நாயகியாக வலம் வரும் நயன்தாரா, நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நெற்றிக்கண்’. இப்படத்தில் நடித்ததோடு, நயன் தயாரிக்கவும் செய்திருக்கிறார். ப்ளைண்ட் என்ற கொரியன் படத்தின் தமிழ் ரீமேக்கான இப்படம் நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இப்படத்தை மிகப்பெரிய தொகைக்கு வாங்கியிருக்கும் டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம், தனது தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவி-க்கு நயன்தாரா பேட்டி ஒன்று கொடுக்க வேண்டும், என்ற நிபந்தனையோடு தான் படத்தை […]

Continue Reading